ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பெற்ற திண்டுக்கல் மாணவர்
சென்னை:
திண்டுக்கல் அருகே உள்ள சி.சி.சி. குவாரி என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்த செந்தில்பாண்டியன் என்ற வேளாண்மாணவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
2001ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் பி.எஸ்சி. வேளாண்மைப்பட்டதாரியான 24 வயதாகும் செந்தில்பாண்டியனுக்கு அகில இந்திய அளவில் 82வது இடம் கிடைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவில் உள்ள குவாரி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் 5ம் வகுப்பு வரைபடித்தார் செந்தில்பாண்டியன். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர்தான் இவருடைய தந்தை தர்மாராஜு.அவருடைய தாய் ருக்மணி சத்துணவு ஊழியராக உள்ளார்.
பின்னர் ராணி மெய்யம்மை பள்ளியில் 10ம் வகுப்பு முடித்த அவர் திருச்சி ஈ.ஆர். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூமுடித்தார்.
பிளஸ் டூ முடித்தவுடனேயே எம்.பி.பி.எஸ். சேர வேண்டும் என்பதற்காகக் கடுமையாக உழைத்தார். ஆனால்அதற்கு சீட் கிடைக்காததைத் தொடர்ந்து மதுரை வேளாண் கல்லூரியில் சேர்ந்தார்.
கடந்த 1999 மற்றும் 2000ம் ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ். தேர்வுகளை எழுதினார். ஆனால் இரண்டு முறையும் தேர்ச்சிபெறவில்லை.
தற்போது மூன்றாவது முறையாக 2001ல் அவர் எழுதிய ஐ.ஏ.எஸ். தேர்வில் அவருக்குப் பலன் கிடைத்து விட்டது.
செந்தில்பாண்டியன் கடந்த 2000ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி. - குரூப் 1 தேர்வெழுதி டி.எஸ்.பியாக ஆகியுள்ளார்என்பதும் பிளஸ் டூ வரை தமிழ் மீடியம்தான் படித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இடைவிடாத முயற்சி, கடினமான உழைப்பு, தன்னம்பிக்கை, தோல்விகளைக் கண்டு சோர்ந்து விடாமல் இருப்பதுஆகியவைதான் தன்னுடைய ஐ.ஏ.எஸ். வெற்றியின் ரகசியம் என்கிறார் செந்தில்பாண்டியன்.












Click it and Unblock the Notifications