பாகிஸ்தானுக்கு இந்தியா பாடம் புகட்ட வேண்டும்: கருணாநிதி
சென்னை:
ஜம்மூவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு திமுக தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருணாநிதி இன்று கூறியதாவது:
ஆழ்ந்த வருத்தம், அதிர்ச்சி போன்ற அனுதாப வார்த்தைகளால் இந்தியர்களை அமெரிக்கர்கள் சமாதானப்படுத்தமுயற்சிக்கின்றனர். ஆனால் ஜம்மூவில் தாக்குதல் நடத்தத் தூண்டியுள்ள பாகிஸ்தானை அமெரிக்கா கடுமையாகஎச்சரிக்கை விடுக்க வேண்டும்.
இமயம் முதல் குமரி வரை பயங்கரவாதம் பரவி விடாதபடி தகுந்த நடவடிக்கையை இந்திய அரசு எடுக்கவேண்டும்.
தீவிரவாதிகளை எதிர்த்து போராட போதிய படை மற்றும் ஆயுத வசதி இல்லை என்று காஷ்மீர் முதல்வரான பரூக்அப்துல்லா கூறியுள்ளார். எனவே அந்த மாநிலத்திற்கு தேவையான வசதிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.
ஜம்மூவில் நடந்த தாக்குதல்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருப்பது வரவேற்கத்தக்கதுஎன்றார் கருணாநிதி.