இடைத் தேர்தல்: வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்
சென்னை:
வரும் 31ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை இடைத் தேர்தலுக்காக மனுத் தாக்கல் செய்துள்ளவர்கள் தங்கள்மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ள இன்று தான் கடைசி நாளாகும்.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் கடந்த 6ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது.
கடந்த 13ம் தேதி மாலை வரை பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் சுயேச்சை வேட்பாளர்களுமாக 77பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இந்த வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. முன்னாள் திமுகஎம்.எல்.ஏவான செங்கை சிவம் மூன்று தொகுதிகளிலும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து பெரும் பரபரப்பைஏற்படுத்தினார்.
ஆனால் சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய தொகுதிகளில் அவருடைய வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அச்சிறுப்பாக்கத்தில் மட்டும் அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிறகு மூன்று தொகுதிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் இன்று மாலை தேர்தல் கமிஷனால்வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications