சிகாகோ, ப்ராங்பர்ட்டிற்கு ஏர்-இந்திய விமானங்கள்
டெல்லி:
அமெரிக்காவின் சிகாகோ, இங்கிலாந்தின் ப்ரான்ங்பர்ட் போன்ற முக்கிய நகரங்களுக்கு, இந்தியாவில் இருந்து நேரடி விமானங்களைஇயக்க ஏர்-இந்தியா முடிவு செய்துள்ளாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாநவாஸ் ஹூசைன் கூறினார்.
விமானத்துறையும் சுற்றுலாவும் என்ற மாநாட்டில் பேசிய அவர் கூறுகையில்,
சமீபத்தில் அமெரிக்கத் தூதர் ராபர்ட் ப்ளாக்வில்லை சந்தித்து பேசினேன். அமெரிக்காவில் செம்பம்பர் 11 ஆம் தேதி தீவிரவாதிகள்தாக்குதலையடுத்து பல அமெரிக்க விமான நிறுவனங்கள் இந்தியாவுக்கு விமான சேவையை நிறுத்திவிட்டது குறித்து விவாதித்தேன்.மீண்டும் அந்தச் சேவையை துவக்க உதவுவதாக அவர் உறுதியளித்தார்.
இந்திய விமானங்களுக்கு லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வசதியான நேரம் ஒதுக்கப்படவில்லை. இது குறித்து இந்திய பிரதமர்வாஜ்பாய், பிரிட்டன் அதிபர் டோனி ப்ளேருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சில் பிரிட்டன் விமான நிறுவனங்கள் (விர்ஜின் ஏர்வேஸ்) இந்தியாவுக்கு கூடுதலாக விமானங்கள் இயக்க அனுமதி கோரியுள்ளன.லண்டனுக்கு கூடுதலாக விமானங்கள் இயக்க ஏர் இந்தியாவுக்கு அனுமதி தந்தால் தான் நாம் அவர்களின் கோரிக்கையைநிறைவேற்றுவோம் என்றார் ஹூசைன்.












Click it and Unblock the Notifications