பொறியியல் கல்லூரி விண்ணப்பங்கள் 20ம் தேதி முதல் வினியோகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியானதைத் தொடர்ந்து வரும் 20ம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகளில்சேருவதற்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கடந்த இரு நாட்களுக்கு முன் பொறியியல், மருத்துவம் மற்றும் வேளாண் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.
இதையடுத்து பிளஸ் டூ தேர்வு முடிவுகளும் இன்று காலை வெளியாகின.
இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரும் 20ம் தேதி முதல் வினியோகம்செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் கரூர் வைஸ்யா வங்கி ஆகியவற்றில் பணம் செலுத்திவிண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications