குழந்தையின் வாயில் மதுவை ஊற்றி வரதட்சணை கொடுமை
சென்னை :
ஒன்றரை வயது பெண் குழந்தையின் வாயில் மதுவை ஊற்றி பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மிரட்டியவரையும்அதற்கு உடந்தையாக இருந்த தாயையும் போலீசார் கைது செய்தனர்.
சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த பிஜூநாயர் (34) என்பவருக்கும் தர்மபுரியைச் சேர்ந்த நிஷாகுமாரி (22)என்பவருக்கும் கடந்த 2000ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது நிஷாகுமாரியின் பெற்றோர் பிஜூநாயருக்கு 2 லட்ச ரூபாய் பணமும், 40 பவுன் நகையும்வரதட்சணையாகக் கொடுத்தனர். இவர்களுக்குத் தற்போது ஒன்றரை வயதில் தேவிகா என்றொரு மகளும் உண்டு.
நிஷாகுமாரி தருமபுரி மாவட்டம், குறிஞ்சிப்பட்டியில் ஆசிரியராக பணிபுரிகிறார். திருமணத்திற்குப் பிறகு 2ஆண்டுகளாக பிஜூநாயர் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே உண்டு உறங்கி வந்தார்.
இந்த லட்சணத்தில் கொடுத்த வரதட்சணை போதாதென்று, நிஷாகுமாரியிடம் மேலும் வரதட்சணை கேட்டுகொடுமைப் படுத்தியுள்ளார்.
சமீபத்தில் பிஜூநாயரின் கொடுமை உச்சகட்டத்தை அடைந்தது. தன்னுடைய ஒரே மகளின் வாயில் பிராந்தியைஊற்றி நிஷாகுமாரியிடம் வரதட்சணை கேட்டு மிரட்டியுள்ளார். வரதட்சணை தராவிட்டால் இருவரையும் கொன்றுவிடப் போவதாகவும் பிஜூநாயர் மிரட்டினார்.
இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சியும் நிஷாகுமாரிக்குத் தெரியவந்தது. பிஜூநாயருக்கு ஏற்கனவே திருமணம்ஆகிவிட்டது என்ற விஷயத்தை அவரும் அவருடைய தாயாரும் நிஷாகுமாரியின் குடும்பத்தினரிடம்மறைத்திருந்தனர்.
இதனால் மிகவும் கொதிப்படைந்த நிஷாகுமாரி உடனடியாக நீலாங்கரையில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்குச்சென்று அவர்களைப் பற்றி புகார் கொடுத்தார்.
நிஷாகுமாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் பிஜூநாயரையும் அவருடைய தாய் விஜயலெட்சுமியையும்போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications