Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தையின் வாயில் மதுவை ஊற்றி வரதட்சணை கொடுமை

Subscribe to Oneindia Tamil

சென்னை :

ஒன்றரை வயது பெண் குழந்தையின் வாயில் மதுவை ஊற்றி பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மிரட்டியவரையும்அதற்கு உடந்தையாக இருந்த தாயையும் போலீசார் கைது செய்தனர்.

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த பிஜூநாயர் (34) என்பவருக்கும் தர்மபுரியைச் சேர்ந்த நிஷாகுமாரி (22)என்பவருக்கும் கடந்த 2000ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது நிஷாகுமாரியின் பெற்றோர் பிஜூநாயருக்கு 2 லட்ச ரூபாய் பணமும், 40 பவுன் நகையும்வரதட்சணையாகக் கொடுத்தனர். இவர்களுக்குத் தற்போது ஒன்றரை வயதில் தேவிகா என்றொரு மகளும் உண்டு.

நிஷாகுமாரி தருமபுரி மாவட்டம், குறிஞ்சிப்பட்டியில் ஆசிரியராக பணிபுரிகிறார். திருமணத்திற்குப் பிறகு 2ஆண்டுகளாக பிஜூநாயர் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே உண்டு உறங்கி வந்தார்.

இந்த லட்சணத்தில் கொடுத்த வரதட்சணை போதாதென்று, நிஷாகுமாரியிடம் மேலும் வரதட்சணை கேட்டுகொடுமைப் படுத்தியுள்ளார்.

சமீபத்தில் பிஜூநாயரின் கொடுமை உச்சகட்டத்தை அடைந்தது. தன்னுடைய ஒரே மகளின் வாயில் பிராந்தியைஊற்றி நிஷாகுமாரியிடம் வரதட்சணை கேட்டு மிரட்டியுள்ளார். வரதட்சணை தராவிட்டால் இருவரையும் கொன்றுவிடப் போவதாகவும் பிஜூநாயர் மிரட்டினார்.

இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சியும் நிஷாகுமாரிக்குத் தெரியவந்தது. பிஜூநாயருக்கு ஏற்கனவே திருமணம்ஆகிவிட்டது என்ற விஷயத்தை அவரும் அவருடைய தாயாரும் நிஷாகுமாரியின் குடும்பத்தினரிடம்மறைத்திருந்தனர்.

இதனால் மிகவும் கொதிப்படைந்த நிஷாகுமாரி உடனடியாக நீலாங்கரையில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்குச்சென்று அவர்களைப் பற்றி புகார் கொடுத்தார்.

நிஷாகுமாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் பிஜூநாயரையும் அவருடைய தாய் விஜயலெட்சுமியையும்போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+