கும்ப்ளே தாடையில் ஆபரேஷன்: குணமாகி வருகிறார்
பெங்களூர்:
மேற்கு இந்தியத் தீவுகளில் ஆடிக் கொண்டிருந்தபோது, தாடையில் அடிபட்ட இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில்கும்ப்ளேக்கு நேற்று பெங்களூரில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தற்போது வேகமாகக்குணமடைந்து வருகிறார்.
இந்திய-மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே கடந்த வாரம் நடந்த டெஸ்ட் பந்தயத்தின்போது, எதிரணிப்பந்து வீச்சாளர் மெர்வின் டில்லோன் வீசிய பந்து கும்ப்ளேயின் தாடையைப் பயங்கரமாகத் தாக்கியது.
இதனால் தாடையில் படுகாயமடைந்த போதிலும் அடுத்த இன்னிங்சில் 14 ஓவர்கள் வரை பந்து வீசிய கும்ப்ளே,மேற்கு இந்தியத் தீவுகளின் முன்னணி பேட்ஸ்மேனாகிய பிரையன் லாராவின் விக்கெட்டைச் சாய்த்து இந்தியவீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியை அளித்தார்.
ஆனாலும் கும்ப்ளே அடுத்த டெஸ்ட்டில் விளையாட முடியாது என்றும் உடனடியாக அவருக்கு அறுவைச் சிகிச்சைஅளிக்கப்பட வேண்டும் என்றும் கிரிக்கெட் குழுவைச் சேர்ந்த மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
இதையடுத்து சமீபத்தில் பெங்களூர் வந்து சேர்ந்த கும்ப்ளேவுக்கு நேற்று இங்குள்ள மல்லய்யா மருத்துவமனையில்அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. பிரபல பல் மருத்துவரான டாக்டர் கிஷோர் நாயக் தலைமையில் சுமார் 45நிமிடங்களுக்கு இந்த அறுவைச் சிகிச்சை நடந்தது.
உள்பக்கமாக உடைந்து போன அவருடைய கீழ்த்தாடைப் பகுதியில் இரண்டு டைட்டானியம் தகடுகள் தற்போதுபொருத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து தற்போது தாடைக் காயத்திலிருந்து கும்ப்ளே வெகு வேகமாகக் குணமடைந்து வருகிறார். இன்னும்10 அல்லது 15 நாட்களில் அவர் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடலாம் என்றும் டாக்டர் கிஷோர்கூறிவிட்டார்.
இந்நிலையில் இன்று பகல் கும்ப்ளே மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போதுநிருபர்களிடம் பேசிய கும்ப்ளே தான் வேகமாகக் குணமடைந்து வருவதாகவும் விரைவில் மீண்டும் இந்தியஅணியில் சேரப் போவதாகவும் தெரிவித்தார்.
இதற்காக அடுத்த வாரமே தன்னுடைய பயிற்சிகளை ஆரம்பிக்கப் போவதாகவும் கும்ப்ளே மகிழ்ச்சியுடன்தெரிவித்தார்.