சிவகங்கை அருகே மின்னல் தாக்கி 4 பேர் பலி
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
தமிழகம் முழுவதுமே நேற்று மாலை பரவலாக நல்ல மழை பெய்தது. சென்னையில் தொடங்கி கன்னியாகுமரிவரை அனைத்து இடங்களிலும் மழை பெய்து, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில் நேற்று மாலை சிவகங்கை மாவட்டத்திலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேல் இந்தக் கடும் மழை நீடித்தது.
அப்போது கூத்தங்குளம் கிராமத்தில் செங்கற்சூளையில் வேலை செய்து கொண்டிருந்த மூன்று பெண்களை மின்னல்தாக்கியதில் இரண்டு பேர் அந்த இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
அந்த செங்கற்சூளை முதலாளியின் மனைவி இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் பூவந்தி அருகே மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மின்னல்தாக்கியதில் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் நான்கு மாடுகளும் உடல் கருகி உயிரிழந்தன.
இதற்கிடையே மானாமதுரையில் மழைக்காக மரத்தடியில் ஒதுங்கிய 50 வயது முதியவரை மின்னல் தாக்கியதில்அவரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications