ஜெ. காசு தருவார்: மதுரை மேயர் நம்பிக்கை
சென்னை:
மதுரை மாநகரின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதியை முதல்வர் ஜெயலலிதா விரைவில் ஒதுக்கித் தருவார் என்று மதுரைமாநகராட்சியின் திமுக மேயர் செ.ராமச்சந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரை மேயர் செ.ராமச்சந்திரன் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் அடங்கிய குழுசமீபத்தில் சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தது. திமுக மேயர் ஜெயலலிதாவைச் சந்திப்பது குறித்து புருவங்கள் உயர்ந்தன.
ஆனால், மதுரை மாநகர திட்டங்களுக்குத் தேவையான நிதியை ஒதுக்கித் தரக் கோரி தான் ஜெயலலிதாவைச் சந்தித்தேன் என்று மேயர்ராமச்சந்திரன் விளக்கம் தந்திருக்கிறார்.
இந் நிலையில் சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு மேயர் ராமச்சந்திரன் மதுரை திரும்பினர். மதுரையில் செய்தியாளர்களிடம்அவர் பேசுகையில், முதல்வரிடம் மதுரை மாநகர திட்டங்கள் குறித்து விளக்கியுள்ளோம். அவர் விரைவில் நிதி ஒதுக்கீடு செய்வார் என்றுநிம்புகிறோம்.
எனது தலைமையில் சென்னை சென்ற குழுவில் துணை மேயர் சின்னத்துரை இடம் பெறாதது துரதிர்ஷ்டவசமானது. இதுகுறித்துக் கருத்துத்தெரிவிக்க நான் விரும்பவில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications