சென்னையை மகிழ்வித்த திடீர் மழை, பயமுறுத்திய சூறாவளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகரில் நேற்று பகல் முழுவதும் கடும் வெயில் அடித்துக் கொண்டிருந்த நிலையில் மாலையில் திடீர் என்று சூறாவளிக் காற்றுடன்கன மழை பெய்து மக்களைக் குளிர்வித்தது.

கடந்த சில நாட்களாகவே கடும் வெயில் அடித்து வருகிறது. வியாழக்கிழமையும் கடும் வெயில் வீசியது. காலை முதல் அடித்து வந்தவெயிலால் வறுபட்டுக் கொண்டிருந்த சென்னை மக்களுக்கு மாலையில் பெரும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

மாலையில் திடீரென்று வானம் இருண்டது. சிறிது நேரத்தில் கன மழை பெய்தது. அத்தோடு பயங்கரமான சூறாவளிக் காற்றும் வீசியது.இதில் பல குடிசை வீடுகள் பிய்த்துக் கொண்டு பறந்தன. வெளியில் இருந்த பிளாஸ்டிக் குடங்கள் போன்ற பொருட்கள் காற்றில் பறந்தன.

சுமார் கால் மணி நேரம் பெய்த பலத்த மழையால் சென்னை நகரமே குளிர்ந்தது. 15 நிமிடங்களில் 110 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாகவானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் பல இடங்களில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்துள்ளது.

மின்னல் தாக்கி தமிழகம் முழுவதும் 6 பேர் பலியாகியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+