பாக். மீது விரைவில் கடும் நடவடிக்கை: அத்வானி
டெல்லி:
தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்பி வரும் விரைவில் பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை வரும் என்றுஉள்துறை அமைச்சர் அத்வானி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று காலை முதல் நடந்த தொடர் விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய அத்வானி,
என்ன மாதிரியான நடவடிக்கை என்பதை இங்கே வெளிப்படையாக சொல்ல முடியாது. இன்று நடந்தவிவாதத்தின் மூலம் ஒன்று மட்டும் தெளிவாகிவிட்டது. இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் அரசுடன்உள்ளன என்பதை உணர்கிறோம்.
பாகிஸ்தான் மீது எந்த வகையான நடவடிக்கை எடுக்கவும் அரசு தயாராக உள்ளது.
பாகிஸ்தானைப் போய் தீவிரவாதத்துக்கு எதிராக போராட அமெரிக்கா தன்னுடன் கூட்டு சேர்த்துக் கொண்டுள்ளதுகேலிக்குறியது. பாகிஸ்தான் மீது நமக்கு கோபம் வருகிறது என்றால் அமெரிக்காவில் செயல் பெரும் அதிருப்திதருகிறது.
அமெரிக்கா மீதான நமது கோபத்தை அந் நாட்டுத் தூதர் பிளாக்வில்லிடம் நேற்றே தெரிவித்துவிட்டோம் என்றார்அத்வானி.












Click it and Unblock the Notifications