17 குழந்தைகள் உடல்நலம் பாதிப்பு: சத்துணவுக் கூடத்தின் தண்ணீர் காரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் ஒரு சத்துணவுக் கூடத்தில் தண்ணீர் குடித்த 17 குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.
வட சென்னைப் பகுதியில் உள்ளது கல்யாண புரம். இங்குள்ள மதிய உணவுக் கூடத்தில் உணவருந்திவிட்டு விளையாடிக் கொண்டிருந்த பலகுழந்தைகள் திடீரென மயங்கி விழுந்தன.
அப்போது பலருக்கு வாந்தியும் ஏற்பட்டது. இதையடுத்து பதற்றமடைந்த சத்துணவுக் கூட ஆயா அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின்உதவியுடன் அந்தக் குழந்தைகளை ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றர்.
அங்கு இந்தக் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் 13 பேர் குணமடைந்துவிட்டனர். ஆனால், மேலும் 4குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதிய உணவுக் கூடத்தில் இருந்த கெட்டுப் போய் இருந்த தண்ணீரைக் குடித்ததால் தான் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள்கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications