தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வெற்றி பெறவில்லையே: கருணாநிதி வருத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிளஸ் டூ தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த 11 மாணவர்களுக்கும் திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துத்தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த 11 இடங்களை ஒரு தாழ்த்தப்பட்ட மாணவர் கூட பிடிக்காதது கவலை தருவதாகவும் கருணாநிதிகூறியுள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுக ஆட்சியில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. திமுக ஆட்சியில் கல்வித்துறைக்கு மட்டும் ரூ. 4,949கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் ரூ. 2,233 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதுகல்விக்கு அவர்கள் தந்த முக்கியத்துவத்தைத் தான் காட்டுகிறது.

ஆட்சியில் இருந்தபோது ஆண்டுதோறும் சராசரியாக கல்வித்துறைக்காக நான் ரூ. 534 கோடியை கூடுதலாகஒதுக்கினேன். ஆனால், இந்த அதிமுக ஆட்சி இந்த ஆண்டுக்கு வெறும் 10 கோடியை மட்டும் கூடுதலாக ஒதுக்கிகல்வியை அலட்சியப்படுத்தியுள்ளது.

அதே போல சாதிச் சான்றிதழ் போன்றவற்றை உடனே மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்தை திமுக ஆட்சியில்அறிமுகப்படுத்தினோம். இதனால், 15 லட்சம் மாணவர்கள் பலனடைந்தனர்.

தொழிற்கல்லூரிகளில் சேர கிராமப் புற மாணவர்களுக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. ஆனால், ஜெயலலிதா ஆட்சியின் குளறுபடியால் இத் திட்டம் பரிதாப நிலையில் உள்ளது.

இப்போது முதலிடம் பெற்றுள்ள 11 மாணவர்களுக்கும் உயர் கல்விகக்கான செலவை அரசே ஏற்கப் போகிறது.இதற்குக் காரணம் திமுக தான். முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் 10ம் வகுப்பு 11ம் வகுப்பு மாணவர்களின்உயர் கல்விச் செலவை அரசே ஏற்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது திமுக தான் என்பதை நினைவூட்டவிரும்புகிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+