திருக்கோவிலூரில் இடி தாக்கி 2 சிறுவர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
திருகோவிலூர்:
திருகோவிலூர் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒரு பெண்தீக்காயங்களுடன் தப்பினார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இரண்டு நாட்களாகவே மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்றுஇடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
அங்குளள ஒரு வயலில் மணிகண்டன் (13), சக்திவேல் (13) என்ற இரண்டு சிறுவர்களும், மல்லிகா (35) என்ற ஒருபெண்மணியும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் மழைக்காக ஒரு பாறையின் அருகே ஒதுங்கினர். அப்போது திடீரென்று விழுந்த இடி அவர்களைப்பயங்கரமாகத் தாக்கியது. இதில் மணிகண்டனும் சக்திவேலும் உடல் கருகி பரிதாபமாக அதே இடத்திலேயேஉயிரிழந்தனர்.
மல்லிகா மட்டும் தீக்காயங்களுடன் உயிர் தப்பி தற்போது திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications