தலைமைச் செயலகத்தை திருச்சியில் அமைக்கலாம்: நெடுமாறன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் தலைமை செயலகத்தை திருச்சியில் அமைக்க எம்.ஜி.ஆர். ஆசைப்பட்டார். இதனால் தலைமைச் செயலகத்தை அங்கேயேஅமைக்கலாம் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தலைமைச் செயலக்தை மாமல்லபுரம் அருகே அமைக்கப் போவதாக செய்திகள் வெளியாகின்றன. மாமல்லபுரத்தில் அமைப்பதற்குப்பதிலாக திருச்சியில் அமைக்கலாம். இதன் மூலம் தலைமைச் செயலகத்தை திருச்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்ற மறைந்தஎம்.ஜி.ஆரின் கனவு நனவாகும்.
தென் மாவட்டங்களுக்கும் முக்கியத்துவம் கிடைக்க இந்தச் செயல் உதவும்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்பட்டு விடாமல் எப்பாடு பட்டாவது காக்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications