For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்தியா தாக்கலாம்: பாகிஸ்தான்

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் (PoK) மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தக் கூடும் என்று அந் நாடுஅச்சம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளரும் பாகிஸ்தான் அதிபரின் பத்திரிக்கைச் செயலாளருமானரஷீத் குரேஷி நிருபர்களிடம் கூறுகையில்,

பாகிஸ்தான் மீது முழு அளவில் இந்தியா தாக்குதல் நடத்த வாய்ப்பில்லை. ஆனால், எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளகாஷ்மீரைத் தாக்கலாம்.

ஒருவேளை முழு அளவில் போரில் இறங்கினாலும் அதற்கு முன் நிச்சயம் நூறுமுறையாவது யோசிப்பார்கள்.இந்தியத் தாக்குதலை எதிர்கொள்ள பாகிஸ்தான முழு அளவில் தயாராக உள்ளது.

ஓராண்டுக்குப் பின் மீண்டும் எல்லையில் மார்ட்டர் துப்பாக்கிகளால் இந்தியப் படைகள் தாக்குதல் நடத்திவருகின்றன.

பாகிஸ்தான் ஒன்றும் பாலஸ்தீனம் அல்ல, நினைத்தவுடன் தாக்குவதற்கு. எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரைத்தாக்கினால் முழு அளவில் போர் வெடிக்கும்.

எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரைத் தாக்குவது அவ்வளவு எளிதல்ல. மலைகள் நிறைந்த அந்தப் பகுதியில்இந்தியாவால் விமானங்களையும் பயன்படுத்த முடியாது, டாங்கிகளையும் அனுப்ப முடியாது.

இந்திய காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கு ஆதாரத்தையும்இந்தியா தரவில்லை. மேட் இன் பாகிஸ்தான் என்ற சாக்லேட் உறையைக் காட்டி, இது சம்பவ இடத்தில்இருந்ததாகக் கூறினால் மட்டும் போதாது. உரிய ஆதாரம் தர வேண்டும்.

இவ்வாறு திமிர்தனமாக பேசி முடித்தார் குரேஷி.

இந்திய கமாண்டோக்கள் தாக்கலாம்:

இந் நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் அமைந்துள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியாதாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.

இந்த ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 70 தீவிரவாத முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களை விமானங்கள் அல்லதுகமாண்டோ படையைக் கொண்டு இந்தியா தாக்கலாம் எனவும் அந்தப் பத்திரிக்கை கூறியுள்ளது.

இந்தத் தீவிரவாத முகாம்களை பாகிஸ்தான் மூடிவிட்டதாகக் கூறினாலும் அவை வேறு பெயரில் இயங்கஆரம்பித்துவிட்டன. இப்போது இந்த முகாம்களை ஒழிக்க பாகிஸ்தானை அமெரிக்கா நிர்பந்திக்கும். தீவிரவாதிகள்விஷயத்தில் அமெரிக்காவின் செயல்பாட்டில் இந்தியர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்றும் அந்த பத்திரிக்கைகூறியுள்ளது.

அமெரிக்க அமைச்சர் விரைகிறார்:

இந் நிலையில் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாகிஸ்தானை வலியுறுத்த அமெரிக்கவெளியுறவுத்துறை மூத்த அதிகாரியான ரிச்சர்ட் ஆர்மிடேஜ் தெற்காசியா விரைகிறார்.

இந்தியத் தலைவர்களை சந்தித்துவிட்டு அவர் முஷாரபை சந்திப்பார். கார்கில் விவகாரத்தின்போது ரிச்சர்ட்ஆர்மிடேஜ் மூலமாகத் தான் பாகிஸ்தானை நிர்பந்தித்தார் அப்போதையே அதிபர் கிளின்டன். இப்போது மீண்டும்அவரைக் கொண்டே நிலைமையை சமாளிக்க அதிபர் புஷ் திட்டமிட்டுள்ளார்.

குத்துச்சண்டை வீரரான ஆர்மிடேஜ், முன்னாள் ராணுவ அதிகாரியுமாவார். வெட்டு ஒன்று துண்டு ரெண்டுஸ்டைலில் பேசும் கடுமையான அதிகாரி இவர்.

இவர் தான் முஷாரபை பணிய வைக்க சரியான ஆள் என புஷ் கருதுகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X