பிளஸ் டூ முடிவுகள்: மாணவர் தற்கொலை... 5 தற்கொலை முயற்சிகள்
சென்னை:
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டார். இவர்களைத் தவிர தான் பிளஸ் டூவில் வெற்றி பெற்ற செய்தியை நண்பர்களுக்குத் தெரிவிப்பதற்காகசைக்கிளில் சென்ற ஒரு மாணவர் லாரி மோதி உயிரிழந்தார்.
இவர்களைத் தவிர பாண்டிச்சேரியைச் சேர்ந்த 5 மாணவிகள் தோல்வி காரணமாகத் தற்கொலை முயற்சியில்ஈடுபட்டனர்.
சென்னை கோட்டூர்பூரம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் நந்தகுமார். இவரது இருவரும் மகன்கள்சமீபத்தில் பிளஸ் டூ தேர்வு எழுதியிருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான பிளஸ் டூ தேர்வு முடிவுகளின் போது மூத்த மகனான கோபிநாத்தோல்வியடைந்து விட்டார். ஆனால் அவருடைய தம்பி பாஸ் ஆகி விட்டார்.
தம்பி பாஸாகி தான் பெயிலாகி விட்டோமே என்று மனம் வருந்திய கோபிநாத் நொந்து போன நிலையில்அமைதியாக இருந்தார்.
இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) மாலை அவரது குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தபோது வீட்டில் தனியாகஇருந்த கோபிநாத் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
காலையில் மகிழ்ச்சி இரவில் துக்கம்
இந்நிலையில் பாஸ் ஆன செய்தியை நண்பர்களிடம் சொல்வதற்காக சைக்கிளில் சென்ற பிளஸ் டூ மாணவன் லாரிமோதி பரிதாபமாக இறந்தார்.
தண்டையார் பேட்டை அம்மணி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீசன். பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ளார். தான் பாஸ் ஆன செய்தியை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதற்காக அப்பாவிடமிருந்துகொஞ்சம் பணம் வாங்கிக் கொண்டு சைக்கிளில் சென்றார் ஜெகதீசன்.
அப்போது எதிரே வந்த லாரி எமனாக ஜெகதீசனை சைக்கிளுடன் மோதிச் சாய்த்தது.
இரவு வரை ஜெகதீசன் வீடு திரும்பாதது குறித்து குழம்பிய பெற்றோர் அவரைத் தேடினர். அப்போதுதான் விபத்துகுறித்துத் தெரிய வந்தது.
காலையில் இனிப்புகள் வழங்கி சந்தோஷமாக இருந்த குடும்பத்தினர் இரவில் துக்கத்தில் கதறி அழுததுபரிதாபமாக இருந்தது.
விஷம் குடித்த 5 மாணவிகள்
இதற்கிடையே பாண்டிச்சேரி பகுதியில் பிளஸ் டூ தேர்வில் பெயிலான 5 மாணவிகள் விஷம் குடித்தனர்.
அனைவரும் புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
சுசீலா, ரெட்ரோஸ், சத்யா, அம்பிகா, விஜி ஆகிய அந்த ஐந்து மாணவிகளும் பாண்டிச்சேரியின் பல்வேறுபகுதிகளைச் சேர்ந்தவர்கள்.












Click it and Unblock the Notifications