For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எத்தியோப்பிய மாணவரைக் காணவில்லை

By Staff
Google Oneindia Tamil News

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் படித்து வந்த எத்தியோப்பிய மாணவரைக் காணவில்லை.

தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. கல்லூரியில் படித்து வந்தவர் பெர்கனு பெல்டா இசட்டு. இவர் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்.

இசட்டு தவிர அதே நாட்டைச் சேர்ந்த மேலும் 5 பேரும் இதே கல்லூரியில் படித்து வந்தனர். இவர்களது காப்பாளராக பேராசிரியர் மீனாட்சிசுந்தரம் என்பவர் இருந்து வந்தார். இந்த 6 பேரும் எத்தியோப்பியாவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில்ஒருவர் பெண்.

இசட்டு, வெள்ளிக்கிழமை காலை பேராசிரியர் மீனாட்சி சுந்தரத்தின் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் தான் தங்கியுள்ள வீட்டுக்கு போவதாககூறி விட்டு கிளம்பியுள்ளார். ஆனால் அவர் வீட்டுக்கு வரவில்லை.

அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக மீனாட்சி சுந்தரம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X