Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை ராணுவத்தின் மீது புலிகள் மீண்டும் புகார்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

அமைதி உடன்பாட்டை இலங்கை ராணுவம் மீறி வருவதாக விடுதலைப் புலிகள் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இலங்கை அரசுடனான அமைதிப் பேச்சு வார்த்தையை தகர்க்கும் விதத்தில் ராணுவத்தின் செயல்பாடு இருப்பதாக மத்தியஸ்தம் செய்துவரும் நார்வேயிடம் புலிகள் முறையிட்டுள்ளனர்.

நார்வேயின் வெளியுறவு துறை அமைச்சர் விடர் ஹெல்சென்னும் அமைதிப் பேச்சு வார்த்தையின் தூதரான எரிக் ஸோல்ஹெமும்புதன்கிழமை ஆண்டன் பாலசிங்கத்தை லண்டனில் சந்தித்து அமைதிப் பேச்சு வார்த்தை குறித்து பேச்சு நடத்த உள்ளனர்.

இந் நிலையில் தமிழ் தினப் பத்திரிக்கையான சுடர்ஒளியில் பாலசிங்கம் அளித்துள்ள பேட்டியில்,

இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடக்கும், இலங்கையில் தமிழர்களின் பிரச்சினை தீரும், இம்மண்ணில் அமைதி திரும்பும் என்றஎங்களது நம்பிக்கையை கலைக்கும் விதமாக இலங்கை அரசு நடந்து கொள்கிறது.

அமைதிப் பேச்சு வார்த்தையில் இலங்கை அரசின் ஆர்வம் குறைந்து கொண்டே போகிறது. அடுத்த மாதம் பேச்சு வார்த்தை நடக்குமாஎன்பதை முடிவு செய்யும் பொறுப்பு இலங்கை அரசிடம் தான் உள்ளது. இலங்கை அரசு புலிகள் மீதான தடையை விலக்கிக் கொண்டபின்னரே பேச்சு வார்த்தை நடக்கும்.

இந்தப் பேச்சுவார்த்தையில் மூன்றாவதாக ஒரு நாடும் பங்கேற்க வேண்டும் என்றார் அவர்.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் அடுத்த மாதம் தாய்லாந்தில் நடக்கவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தை மேலும்தள்ளிப்போகலாம் என்ற கவலை அவர் பேச்சில் எதிரொலித்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+