கோவில் அன்ன தானத்திற்கு இஸ்லாமிய தொழிலதிபர் நன்கொடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் கோவில் அன்னதானத் திட்டத்திற்கு வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த இஸ்லாமிய தொழிலதிபர்ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்கினார்.
வாணியம்பாடியில் கடந்த மூன்று நாட்களாக முதல்வர் ஜெயலலிதா இடைத் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டிருந்தார்.பிரசாரத்தின் முடிவில் அவரை ஆம்பூர் தோல் ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர் முகம்மது சயீத் சந்தித்தார்.
கோவில் அன்னதானத் திட்டத்திற்கு ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்குவதாக ஜெயலலிதாவிடம் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து ஜெயலலிதா மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த நன்கொடையை பெற்றுக் கொண்டார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தஒருவர் கோவில் அன்னதானத் திட்டத்திற்கு நன்கொடை அளித்திருப்பதை அவர் பெரிதும் பாராட்டினார்.
அரசு செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications