உடுமலையில் பயங்கர வெடிவிபத்து: 2 பேர் சாவு
உடுமலைப்பேட்டை:
கோயம்புத்தூர் அருகே உடுமலைப்பேட்டையில் ஒரு வெடிமருந்துக் கடையில் பெரும் வெடி விபத்து ஏற்பட்டது.இதில் இரண்டு மாடிக் கட்டடம் தரைமட்டமானது. இந்த வெடி விபத்தில் 2 பேர் இறந்தனர்.
10 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகக்கூறப்படுகிறது.
கோயம்புத்தூரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உடுமலைப்பேட்டை-பொள்ளாச்சி மெயின்ரோட்டில் உள்ள ஒருகடையின் கீழ் தளத்தில் இன்று இந்த இந்த விபத்து ஏற்பட்டது. இதில் அந்தக் கட்டடம் இடிந்து தரைமட்டமானது.
இதில் கடையில் இருந்த 2 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். ஒரு பெண்ணின் நிலைமை மிக மோசமாகஉள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க தீயணைப்புப் படையினரும் போலீசாரும் முயன்றுவருகின்றனர். எத்தனை பேர் இப்படி சிக்கியுள்ளனர் என்றும் தெரியவில்லை.
வெடி விபத்தின்போது ஏற்பட்ட சத்தம் பல கி.மீ. தூரத்துக்குக் கேட்டது. சம்பவம் குறித்த அறிந்தவுடன் உயர்அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கடைக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களும் வெடி விபத்தில் சேதமடைந்தன. வெடிவிபத்துக்கான காரணம் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications