பலான படம் பார்த்து சூடாகி நண்பரை முத்தமிட்டவருக்கு தர்ம அடி
சென்னை:
பலான படத்தைப் பார்த்து விட்டு சூடாகிப் போன ஒருவர், தன்னுடன் உட்காட்ர்ந்து அதே படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தநண்பனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நண்பர் முத்திமிட்டவரை விறகுக் கட்டையால்அடித்தார்.
இதில் முத்தம் கொடுத்தவருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.
சென்னை அடையாறு சிக்னல் பகுதியில் பில்லியர்ட்ஸ் கிளப் உள்ளது. இதை ஹர்ஷத் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு விஜய்ஆனந்த் என்பவர் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இரவு இந்த கிளப்பில் தனது நண்பர் கணேஷுடன் அமர்ந்து நீலப்படம்ஒன்றை சிடியில் போட்டுப் பார்த்தள்ளார் விஜய் ஆனந்த். துணைக்கு பீர் மற்றும் இதர போதை வஸ்துக்களும் பக்கவாத்தியமாகஇருந்தன.
படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த விஜய் ஆனந்த் சூடாகி விட்டார். இதையடுத்து தனக்கு அருகில் உட்கார்ந்திருந்த நண்பர்கணேஷைக் கட்டிப்பிடித்து அவரது உதட்டில் முத்தமிட்டுள்ளார். இதனால் அதிர்ந்து போன கணேஷ், விஜய் ஆனந்தை உதறித்தள்ளி விட்டு எழுந்தார்.
போதையில் என்ன செய்வது என்று தெரியாமல், அருகில் கிடந்த விறகுக் கட்டையை எடுத்து விஜய் ஆனந்தைஅடித்துநொறுக்கினார். அதைப் பார்த்து விட்டு தடுக்க வந்த வாட்ச்மேனுக்கும் விறகுக் கட்டையடி விழுந்தது.
இதில் இருவருக்கும் மிக பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து கணேஷ் அங்கிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து ஹர்ஷத் போலீஸில் புகார் கொடுத்ததையடுத்து கணேஷ் கைதுசெய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications