இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: பாகிஸ்தான்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

தீவிரவாதிகளை ஒழிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராகஇருப்பதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

எல்லையில் இந்திய வீரர்களிடையே உரையாற்றிய பிரதமர் வாஜ்பாய் போருக்குத் தயாராகுமாறு ஆணையிட்டார்.வாஜ்பாய் உரையாற்றிய சிறிது நேரத்தில் பாகிஸ்தான் அரசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.வாஜ்பாயின் பேச்சு குறித்து தனது பாதுகாப்பு ஆலோசகர்கள், அமைச்சரவையின் கூட்டுக் கூட்டத்தில் விவாதித்தபாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் உத்தரவின்பேரில் இந்த அறிக்கை வெளியானது. அதன்விவரம்:

பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. ஆனால், எங்கள் மீது தாக்குதல் நடந்தால் திருப்பித் தாக்குவோம்.

தீவிரவாதத்தை ஒழிக்க நாங்கள் முழு நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்.எங்களுடன் பேச்சு நடத்த இந்தியா முன் வர வேண்டும்.

காஷ்மீரின் பெயரைச் சொல்லிக் கொண்டு தீவிரவாதத்தில் ஈடுபட எந்த அமைப்புக்கும் பாகிஸ்தான் அனுமதி தராது.

அதே நேரததில் காஷ்மீர் மக்கள் தங்கள் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க எங்களது அரசியல், தூதரக ஆதரவுதொடரும்.

இவ்வாறு பாகிஸ்தான் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரிட்டன் தூதரகம் காலியாகிறது:

இதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள பிரிட்டிஷாருக்குப் பாதுகாப்பில்லை என்று கூறி அந் நாடு தனது தூதரகஊழியர்கள் 150 பேரை திரும்ப அழைத்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பிரிட்டிஷாருக்கு தீவிரவாதிகளிடம் இருந்து தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்துகொணடிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+