வீரர்களுடன் உணவு அருந்திய வாஜ்பாய்

Subscribe to Oneindia Tamil

ஜம்மூ:

பிரதமர் வாஜ்பாய் இன்று ஜம்மூவிலிருந்து ஸ்ரீநகர் வந்தார். அவர் குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையில்குவிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களைச் சந்தித்து அவர்களிடையே உரையாற்றினார்.

பின்னர் அங்குள்ள ராணுவ முகாமில் வீரர்களுடன் சேர்ந்து மதிய உணவு உண்டார்.

நேற்று காஷ்மீர் சென்ற அவர் இரவில் ஜம்மூ நகருக்குச் சென்றார். அங்கு கலூசக் ராணுவ முகாமில் தீவிரவாதிகள்தாக்குதலில் கொல்லப்பட்ட ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர்களின் 10 குழந்தைகள், வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 9 பெண்கள் உள்பட 4வீரர்களும் கொல்லப்பட்டனர். இந்தக் முகாமுக்குச் சென்று அக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தனது ஆறுதல்தெரிவித்தார் வாஜ்பாய்.

அங்கிருந்து மருத்துவமனைக்குச் சென்ற வாஜ்பாய் அந்தத் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும்ராணுவ வீரர்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்தார்.

இந் நிலையில் இன்று காலை சிறப்பு விமானத்தில் அவர் ஸ்ரீநகர் வந்தார். பகலில் குப்வாரா பகுதியின் எல்லையில்தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவத்தினரை நேரில் சந்தித்தார்.

நாளையும் ஸ்ரீநகரில் தங்கும் அவர் ராணுவத்தின் தாக்குதல் படையான 16, 17வது கார்ப்ஸ் படையின் தலைவர்கள்,முதல்வர் பரூக் அப்துல்லா, உளவுப் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந் நிலையில் ஹூரியத் கான்பரசின் முக்கியத் தலைவரான அப்துல் கனி லோன் நேற்று தீவிரவாதிகளால்கொல்லப்பட்டதால் காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது. மிதவாதத் தலைவரான அவரை பாகிஸ்தான்கொன்றிருக்கிறது. அவரது இறுதிச் சடங்கு இன்று நடக்கிது.

இவர் கொல்லப்பட்டதையடுத்து ஸ்ரீநகரில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவுஅமலாக்கப்படும் என்று கருதப்பட்டது. ஆனால், அப்படிப்பட்ட திட்டம் ஏதும் இல்லை என அரசு அறிவித்துள்ளது.

ஆனால், அம் மாநிலத்தில் நடந்து வரும் 12ம் வகுப்புத் தேர்வுகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

வாஜ்பாயின் வருகையை எதிர்த்து சில அமைப்புகள் பந்த் நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து அங்குமிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாஜ்பாய் வந்து, செல்லும் வழியில் ஒவ்வொரு 500 மீட்டர் தூரத்திலும் ஒரு ராணுவ சோதனைச் சாவடிஅமைக்கப்பட்டுள்ளது. வாஜ்பாய் பயன்படுத்தும் விமானத் தளத்திற்குச் செல்லும் அனைத்துப் பாதைகளும்மூடப்பட்டுவிட்டன.

பிரதமரின் வருகையையொட்டி காஷ்மீரில் முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அம் மாநிலபோலீஸ் ஐ.ஜி. கே.ராஜேந்திரன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

வாஜ்பாய் காஷ்மீரில் உள்ள நிலையில் முக்கிய அரசியல் தலைவரைக் கொன்று நிலைமையை மோசமாக்கியுள்ளதுபாகிஸ்தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+