For Daily Alerts
Just In
மதுரை: அக்டோபர் முதல் உயர் நீதிமன்றக் கிளை?
மதுரை:
மதுரை உலகனேரியில் அமைக்கப்பட்டு வரும் உயர் நீதிமன்றக் கிளை கட்டுமானப் பணிகள் வரும் அக்டோபர்மாதம் முடிவடையும் என்று அம்மாவட்ட கலெக்டர் ராமச்சந்திரன் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மதுரை உலகனேரியில் ரூ.53 கோடி செலவில் உயர் நீதிமன்றக் கிளைக்கான கட்டிடம் கட்டும் பணி நடந்துவருகிறது.
இந்தப் பணிகள் வரும் அக்டோபர் மாதம் முடிவடையும். அந்த மாதத்தின் இறுதியிலேயே உயர் நீதிமன்றக்கிளையின் பணிகளும் துவங்கும்.
மதுரை விமான நிலைய ரன்வேயை விரிவுபடுத்தும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும். அதற்கு 125ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. அதில் பாதியளவு நிலம் ஏற்கனவே கிடைத்து விட்டது. மீதி நிலம் விரைவில்கிடைத்து விடும் என்றார் ராமச்சந்திரன்.
Comments
Story first published: Thursday, May 23, 2002, 5:30 [IST]