புதுவை: ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களைத் தாக்கிய மாஜி அமைச்சர் ஜாமீனில் விடுதலை
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் நடந்த சமஸ்கிருத வகுப்பு மீது தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்விஸ்வநாதன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
பாண்டிச்சேரியில் சமீபத்தில் சமஸ்கிருத வகுப்புக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதற்குஎதிர்ப்பு தெரிவித்து சி.பி.ஐ. தலைவரும், முன்னாள் அமைச்சருமான விஸ்வநாதன் தலைமையில் நூற்றுக்கணக்கானதொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.
பெரும் பரபரப்பு ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தற்போது அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்டவர்கள் கடலூரிலேயேதங்கியிருந்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் தினசரி கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications