For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோட்டையில் மேலும் ஒரு தற்கொலை முயற்சி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு கொடுப்பதற்காக சென்னை தலைமைச் செயலகத்துக்கு நேற்று (புதன்கிழமை)வந்த ஒருவர் விஷம் குடித்ததையடுத்து, கோட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தற்கொலை செய்து கொள்ளவருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மனு கொடுக்க கோட்டைக்கு ஆயிரக்கணக்கானோர் தினசரி வருகிறார்கள்.ஆனால் அவர்கள் அத்தனை பேரும் ஜெயலலிதாவை சந்திக்க முடிவதில்லை.

இதனால் சிலர் மனம் நொந்து தற்கொலைக்கு முயல்கிறார்கள். இதுவரை 8 முறை இப்படி தற்கொலை முயற்சிகள்நடந்துள்ளன. இதில் 2 பேர் (தம்பதி) பரிதாபமாக இறந்து விட்டனர்.

இந்த நிலையில், புதன்கிழமை கோட்டைக்கு சென்னை வியாசர் பாடியைச் சேர்ந்த அசோக் குமார் என்பவர் வந்தார்.வறுமையில் கஷ்டப்படுவதால் தனியாக டெய்லர் கடை வைப்பதற்கு ரூ.15,000 கொடுத்து உதவ வேண்டும் என்றுஏற்கனவே அவர் மனு எழுதிக் கொடுத்துள்ளார்.

ஆனால் அது நிறைவேறாததையடுத்து புதன்கிழமை கோட்டைக்கு வந்த அவர் கையில் வைத்திருந்த விஷத்தைக்குடித்தார்.

இதையடுத்து அங்கு நின்றிருந்த போலீசார் விரைந்து வந்து அசோக் குமாரை தயாராக நிறுத்தப்பட்டிருந்த வேனில்ஏற்றி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X