சேரன் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது: பயணிகள் உயிர் தப்பினர்
சென்னை:
கோயம்புத்தூரிலிருந்து சென்னை சென்று கொண்டிருந்த சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகள்அரக்கோணம்-காட்பாடிக்கு இடையே இன்று அதிகாலை தடம் புரண்டன. ஆனாலும் பயணிகள் யாரும்காயமடையாமல் தப்பி விட்டனர்.
இன்று அதிகாலை 5.15 மணிக்கு அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது செவ்வூர் அருகே இந்தச் சம்பவம்நிகழ்ந்தது.
இரண்டு ஸ்லீப்பர் பெட்டிகளும், ஒரு ஏ.சி. பெட்டியும் மற்றொரு கார்டு வேனும் தடம் புரண்டன.
ஆனாலும் இந்தப் பெட்டிகளில் இருந்த எந்தப் பயணிக்கும் காயம் ஏற்படவில்லை.
பின்னர் இந்த நான்கு பெட்டிகள் மட்டும் தனியே கழற்றி விடப்பட்டு, அருகிலுள்ள மற்றொரு தண்டவாளப் பாதைவழியாக காலை 9.15 மணிக்கு சேரன் எக்ஸ்பிரஸ் மீண்டும் சென்னை புறப்பட்டுச் சென்றது.
இச்சம்பவத்தால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில் தடம் புரண்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சமீப காலத்தில் ரயில் தடம் புரள்வது, ரயில் கொள்ளை, டிராக் மாறி ரயில் செல்வது ஆகியவை அதிகரித்துக்கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications