தருமபுரியில் சாக்கடையில் வீசப்பட்ட ஆண் சிசு
தருமபுரி:
தருமபுரி பஸ் நிலையம் அருகே பிறந்து சிறிது நேரமே ஆன ஒரு ஆண் குழந்தை சாக்கடையில் வீசப்பட்டு பிணமாகமிதந்து கொண்டிருந்தது.
தருமபுரியில் பெண் சிசுக் கொலைகள் மட்டுமின்றி ஆண் சிசுக் கொலைகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.தருமபுரி மக்கள் மனிதாபிமானம் அற்றவர்களாக மாறிக் கொண்டே வருகின்றனர்.
பெண் சிசுக் கொலைகளை தடுப்பதற்காக தொட்டில் குழந்தை திட்டம் போன்ற பல முயற்சிகளை அரசுமேற்கொண்டுள்ள போதிலும் தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் இன்று வரை பெண் சிசுக் கொலைகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.
சமீப காலத்தில் ஆண் சிசுக் கொலைகளும் நடந்து வருகின்றன. ஏழ்மையான குடும்பச் சூழ்நிலை காரணமாகவேவளர்ப்பதற்குக் கூட முடியாமல் குழந்தைகளைப் பெற்றெடுத்து இந்த ஊர் மக்கள் கொன்று வீசி வருகின்றனர்.
இந்நிலையில் தருமபுரி பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று அதிகாலை சாக்கடையில் நேற்று ஒரு ஆண் குழந்தையின்பிணம் மிதந்து கொண்டிருந்தது. பிறந்து சிறிது நேரமே ஆன நிலையில் அந்த குழந்தை வீசி எறியப்பட்டிருந்தது.
குறை பிரசவத்தில் பிறந்த அந்தக் குழந்தைக்கு கை, கால் வளர்ச்சி இருந்தும் உடலில் போதிய வளர்ச்சிகாணப்படவில்லை.
ரத்தத் துளிகளுடன் மிதந்து கொண்டிருந்த அந்த குழந்தையின் பிணத்தை பன்றிகள் மொய்த்துக் கொண்டிருந்தன.அங்கிருந்த பன்றிகளை விரட்டிய மக்கள் அதை கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து குழந்தையின் பிணத்தை மீட்டனர். இதுகுறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொட்டில் குழந்தையை கடத்திய நர்ஸ் கைது:
இந்நிலையில் இதே மாவட்டத்தில் உள்ள அதியமான் கோட்டை கிராம சுகாதார நிலையத்தைச் சேர்ந்த வேதலட்சுமிஎன்ற பெண் தொட்டில் குழந்தையை கடத்திய குற்றத்திற்காக நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டாள்.
அதியமான் கோட்டையில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையின் வரவேற்பு மையத் தொட்டிலில் போடப்பட்டஆண் குழந்தையை தனது உறவினர் ஒருவருக்காக எடுத்துக் கொடுத்துள்ளார் வேதலட்சுமி.
காவேரிபட்டணத்தைச் சேர்ந்த தனது உறவினர்களான குப்புசாமி-ஜெயா தம்பதிக்கு குழந்தைகள் இல்லாததால்,வரவேற்பு மைய தொட்டிலில் போட்ட ஆண் குழந்தையை எடுத்து அவர்களுக்கு வளர்க்க கொடுத்துள்ளார்வேதலட்சுமி.
நேற்று முழுவதும் விசாரணை நடத்திய போலீசார் பிறகு மாலையில் வேதலட்சுமியைக் கைது செய்தனர்.
இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில் அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுத்தால் பிரச்சினை வரும் என்பதால்விசாரணை வெகு தாமதாக நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் அதியமான் கோட்டையில் நடைபெற்ற பல்வேறு பெண் சிசுக் கொலைகளை வேதலட்சுமிவெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். சிலவற்றை தடுத்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்கடத்தப்பட்ட ஆண் குழந்தையை வளர்ப்பதற்காகத் தான் அவர் எடுத்துச் சென்றாரா அல்லது விற்பதற்காகவா என்றுபோலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications