For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்போ மூலிகை பெட்ரோல்... இப்போ "ஜெரோசின்": மீண்டும் ராமர் பிள்ளை "அட்டகாசம்"

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சில ஆண்டுகளுக்கு முன் மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்துள்ளதாகக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ராமர்பிள்ளை தற்போது மீண்டும் ஒரு புதிய எரிபொருளுடன் இந்தியாவைக் கலக்க வந்துள்ளார்.

இந்த முறை "ஜெரோசின்" என்ற புதிய பெயருடன் தனது புதிய எரிபொருளை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.சென்னை மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் இந்த எரிபொருள் தயாரிப்புக்காக ராமர் பிள்ளைக்கு உதவி செய்கிறது.

"ஜெரோசின்" எரிபொருள் அறிமுக விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் பாஜக எம்.எல்.ஏ.லட்சுமணன், சென்னை மாவட்ட வி.எச்.பி. தலைவர் சம்பத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில்ராமர் பிள்ளை அதிகமாகப் பேசவில்லை.

வி.எச்.பி. தலைவர் சம்பத் குமார் பேசுகையில்,

இந்த எரிபொருளுக்கு அனுமதி வழங்குமாறு தமிழ்நாடு சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும்மாநகராட்சியின் அனுமதியைக் கோரியுள்ளோம். அரசிடம் அனுமதி பெறத் தேவையில்லை. தேவைப்பட்டால்அதையும் செய்வோம்.

இப்போது இதன் விலை ரூ.13 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போகப் பாக ரூ.7 அளவுக்கு இதுகுறைக்கப்படும் என்றார் சம்பத் குமார்.

இந்த எரிபொருளும் மூலிகையிலிருந்து தான் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறிய ராமர் பிள்ளை தனக்குநெருக்கடி ஏற்பட்டபோது கை கொடுத்த வி.எச்.பி. தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ராமர் பிள்ளை தயாரித்த மூலிகை பெட்ரோல் போலியானது என்று விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது ஏற்கனவே வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X