2வது ஏவுகணைச் சோதனை நடத்தியது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
கோரி என்ற ஏவுகணையை செலுத்தி நேற்று சோதனை செய்த பாகிஸ்தான், இன்று காஸ்னவி என்றஏவுகணையையும் செலத்தியது.
தரையிலிருந்து தரை சென்று தாக்கும் வல்லமை பொருந்திய இந்த ஏவுகணை 290 கி.மீ. தூரத்திற்குச் சென்று தாக்கவல்லது.
ஹத்ப்-3 ரகத்தைச் சேர்ந்த இந்த காஸ்னவி ஏவுகணையைப் பாகிஸ்தான் இன்று காலை ஏவி சோதனை செய்தது.
பாகிஸ்தானின் பல ஏவுகணைத் தயாரிப்புகளுக்கு சீனா உதவி செய்த போதிலும் காஸ்னவி ஏவுகணை முழுக்கமுழுக்க பாகிஸ்தான் விஞ்ஞானிகளாலேயே தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இன்று இந்தச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்காக அந்த விஞ்ஞானிகளை பாகிஸ்தான் ராணுவஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப் பாராட்டினார்.
அணுகுண்டை ஏந்திக் கொண்டு 1,500 கி.மீ. தொலைவிற்குச் சென்று தாக்கும் திறன் வாய்ந்த கோரி ஏவுகணையைப்பாகிஸ்தான் நேற்று ஏவி சோதனை நடத்தியது. இந்தச் சோதனையை நடத்திய கையோடு இந்தியாவுடன் நாங்கள்போருக்குத் தயார் என்றும் முஷாரப் கூறினார்.
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் எதிர்ப்புக் குரல்களை அலட்சியப்படுத்தி எல்லையில்தற்போது பதற்றம் மிகுந்துள்ள சூழ்நிலையில் வரும் 28ம் தேதி வரை தொடர்ந்து ஏவுகணைச் சோதனைகளைநடத்தத் திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே பாகிஸ்தான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த ஏவுகணைச் சோதனைகளால் நாங்கள் பயப்படப் போவதில்லை என்று இந்தியா நேற்று அறிவித்துவிட்டது.