ரஷ்ய அமைச்சர் திடீர் பாகிஸ்தான் பயணம்
இஸ்லாமாபாத்:
ரஷ்ய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் அனடோலி சபயேவ் திடீர் பயணமாக இன்று பாகிஸ்தான் வந்தார்.
தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்புவதை பாகிஸ்தான் முதலில் நிறுத்த வேண்டும் என முஷாரபிடம்வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.
நேற்று இந்த விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் புடினும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சும் விவாதித்தனர்.இதையடுத்து தனது வெளியுறவுத்துறை அமைச்சரை புடின் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளார். இவர்இந்தியாவுக்கும் வருவார் என்று தெரிகிறது.
பிரதமர் வாஜ்பாயையும், முஷ்ரபையும் கஜாகிஸ்தானில் நடக்கும் ஒரு மாநாட்டின்போது நேரில் சந்தித்துப் பேசவும்புடின் ஆர்வம் தெரிவித்துள்ளார். இதற்கான அழைப்பை இருவருக்கும் அமைச்சர் அனடோலி மூலம் புடின்அனுப்பி வைத்திருப்பதாகத் தெரிகிறது.
இந்திய வீரர் பலி:
இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவம் நடத்தி பீரங்கித் தாக்குதலில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கொல்லப்பட்டார். ஜம்மூவில் நெளஷெரா என்ற இடத்தில் இச் சம்பவம் நடந்தது. இதில் மேலும் 9 பேரும்காயமடைந்தனர்.
இதையடுத்து கன ரக பீரங்கிகளால் இந்தியப் படைகள் திருப்பித் தாக்கின. இதில் பாகிஸ்தான் தரப்பில் பலர்இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், தநது தரப்பில் ஏற்படும் சேதங்களை பாகிஸ்தான் வெளியிடமறுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications