வீரப்பனைப் பிடிக்கும் பணியில் தொய்வில்லையாம் !
சென்னை:
வீரப்பனைப் பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்படவில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து நேற்று (திங்கள்கிழமை) தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
வீரப்பனின் பலம் வெகுவாகக் குறைந்துள்ளது. அவனுடன் தற்போது இரண்டு பேர் மட்டுமே உள்ளனர்.
வீரப்பனையும் அவனுடைய கூட்டாளிகளையும் பிடிக்கும் தமிழக அதிரடிப்படையினரின் நடவடிக்கையில்எந்தவிதமான மாற்றமும் இல்லை. தொய்வும் ஏற்பட்டிருக்கவில்லை.
அதிரடிப் படையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் தற்போதும் கூட தங்கள் புதிய இடங்களில்இருந்து கொண்டே அதிரடிப்படைக்குத் தேவையான தகவல்களை அளித்து உதவிக் கொண்டு தான் உள்ளனர்.
இதனால் அதிரடிப் படையினருக்குக் கூடுதல் பலம் கிடைத்துள்ளது. எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் அதிரடிப்படையினர் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர் என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications