தமாகா இணைப்பை ஒத்திவைக்க சோனியாவுக்குக் கடிதமா? தங்கபாலு மறுப்பு
சென்னை:
தங்கள் கட்சியுடன் தமாகாவை இணைப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ்தலைவரான சோனியா காந்திக்குத் தான் கடிதம் அனுப்பியுள்ளதாக வந்த செய்திகளை தமிழக காங்கிரஸ் கட்சியின்முன்னாள் தலைவரான தங்கபாலு மறுத்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான இளங்கோவனை தங்கபாலு உள்ளிட்ட பல காங்கிரஸ் பிரமுகர்களும்ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகின்றனர்.
இவர்கள் தற்போது காங்கிரஸ் கட்சியுடன் தமாகாவை இணைப்பதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளதாகச் செய்திகள்வெளியாகின.
தமாகாவைக் காங்கிரசுடன் இணைப்பது குறித்த விஷயத்தில் எந்தவிதமான அவசர முடிவையும் எடுக்க வேண்டாம்என்றும் நம்முடன் இணைவதற்கு தமாகா விதித்துள்ள பல நிபந்தனைகளை காங்கிரஸ் தலைமை அவசரப்பட்டுஏற்றுக் கொண்டுவிடக் கூடாது என்றும் தங்கபாலு தலைமையிலான அதிருப்தி கோஷ்டியினர் சோனியாவுக்குக்கடிதம் எழுதியுள்ளதாகவும் அந்தச் செய்திகள் கூறின.
ஆனால் அந்தச் செய்திகளை மறுத்துள்ளார் தங்கபாலு. காங்கிரஸ் கட்சியுடன் தமாகா இணைவதை கட்சியின்மேலிடம் ஆதரிப்பதைப் போலவே தானும் ஆதரிப்பதாகவும் இந்தச் செய்திகள் தவறானவை என்றும் தங்கபாலுவிளக்கமளித்துள்ளார்.