இன்று ஓய்கிறது இடைத் தேர்தல் பிரச்சாரம்
சென்னை:
சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிறுப்பாகம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கும் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (புதன்கிழமை) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.
கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வந்த பிரச்சாரம் சமீபத்தில் விறுவிறுப்படைந்தது.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் சைதாப்பேட்டை தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர்கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் ஒரே நேரத்தில் பிரச்சாரத்தில்ஈடுபட்டதால் தொகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சைதாப்பேட்டையில் அதிமுக, திமுக, மதிமுக ஆகிய மூன்று கட்சிகளும் போட்டியிடுகின்றன. இருப்பினும்அதிமுக, திமுக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. திமுகவின் கோட்டையாக கருதப்படும் இதில் அதிமுகசார்பில் நடிகர் ராதாரவியும், திமுக சார்பில் மா. சுப்ரமணியமும் போட்டியிடுகிறார்கள்.
வாணியம்பாடி தொகுதியில் திமுக சார்பில் பிரபல பாடகர் நாகூர் ஹனீபா போட்டியிடுகிறார். அதிமுக சார்பில்வடிவேலு போட்டியிடுகிறார். இங்கும் இந்த இரு கட்சிகளுக்கிடையே தான் பலத்த போட்டி நிலவுகிறது.
இதே போல் அச்சிறுப்பாக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பார்வேந்தனும், அதிமுக சார்பில்பூவராகமூர்த்தியும் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. நாளை வீடு வீடாக சென்று வாக்குகேட்கலாம்.
வரும் 31ம் தேதி வெள்ளிக்கிழமை வாக்குப் பதிவு நடக்கிறது. ஜூன் 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றேமுடிவுகள் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications