For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாதுகாப்புக்காக மண்டபத்திலிருந்து சென்னை வந்த "ஹோவர்கிராப்ட்" படகு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கல்பாக்கத்திலுள்ள இந்திரா காந்தி அணு மின் நிலையம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையம்ஆகியவற்றைத் தகர்க்கப் போவதாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதையடுத்து, கடலோரக்காவற்படைக்குச் சொந்தமான ஒரு "ஹோவர்கிராப்ட்" படகு மண்டபத்திலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதையடுத்து இதுவரை சென்னை துறைமுகத்தில் இருந்த "ராயல் மெட்ராஸ் யாக்ட் கிளப்"பும் மூடப்பட்டு,அப்பகுதியைக் கடலோரக் காவற்படை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

"ஹோவர்கிராப்ட்" படகை மண்டபத்திலிருந்து கொண்டு வர வேண்டும் என்று கடந்த திங்கள்கிழமை (27ம் தேதி)விசாகப்பட்டினத்தில் நடந்த பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சென்னைத் துறைமுகத்திலிருந்து செயல்படுவதற்காக கடந்த ஒரு ஆண்டாகவே கடலோரக் காவற்படை இடம்கேட்டு வந்ததையடுத்து யாக்ட் கிளப்பை மூடி விட்டு அங்கிருந்து கடலோரக் காவற்படை செயல்படும் என்றுஅக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

அதிலும் கல்பாக்கம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு தீவிரவாதிகள் மிரட்டல் வந்ததையடுத்தே இம்முடிவுஎடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X