குருவி சுடும் துப்பாக்கியால் சுட்டு நரிக்குறவர் கொலை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே நரிக்குறவர் கூட்டத்தில் ஏற்பட்ட தகராறில் ஒரு நரிக்குறவரை மற்றொரு நரிக்குறவர்குருவி சுடும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
திருவண்ணாமலை அருகே செங்கம் பகுதியில் வசித்து வந்தவர் மணிவண்ணன். இவர் ஒரு நரிக்குறவர். இவரும்மற்ற நரிக்குறவர்களும் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
மணிவண்ணன் தனது மனைவியை அடிக்கடி அடித்து உதைப்பது வழக்கமாம். இதைக் கேள்விப்பட்டமணிவண்ணனின் மாமனார் விரைந்து வந்தார். மணிவண்ணனை அவர் தாறுமாறாக போட்டு அடித்துள்ளார்.
இதையடுத்து "கேமா" "சோமா" என்று சப்தத்துடன் கூட்டம் கூடி விட்டது. நரிக்குறவர்கள் அனைவரும் சேர்ந்துமணிவண்ணனைக் கண்டித்தனர். பின்னர் அவரையும் அவருடைய மாமனாரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில்அவர்கள் ஈடுபட்டனர்.
அப்போது கூட்டத்திலிருந்த ஒரு நரிக்குறவ இளைஞர் தன் கையில் வைத்திருந்த குருவி சுடும் துப்பாக்கியை எடுத்துமணிவண்ணனை நோக்கிச் சுட்டார். இதில் குண்டு பாய்ந்து உயிருக்குப் போராடிய மணிவண்ணன் சென்னை அரசுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மணிவண்ணன் பரிதாபமாக இறந்தார்.