எல்லையில் 14 கிராமங்கள் நிரந்தர மாற்றம்
ஜம்மூ:
ஜம்மூ அருகே பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள 14 கிராமங்கள் அங்கிருந்து பூஞ்ச் பகுதிக்கு நிரந்தரமாகமாற்றப்படுகின்றன.
பலாக்கோட், தார்கண்டி மற்றும் கெர்னி ஆகிய பகுதிகளில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கருகே 43கிராமங்கள் பாகிஸ்தானின் தொடர்ந்த தாக்குதலுக்கு இலக்காகின்றன.
பாகிஸ்தான் நடத்தும் பீரங்கி மற்றும் ஷெல் தாக்குதல்களால் இந்தக் கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.இந்தக் கிராமங்கள் வழியாகத் தான் பாகிஸ்தான் தீவிரவாதிகளும் அதிக அளவில் இந்தியாவுக்குள் ஊடுருவிவருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாலும் இரு நாடுகளுக்கும் இடையே எப்போதுவேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழ்நிலை நிலவுவதாலும் இங்குள்ள 43 கிராமங்களையும் ஒட்டுமொத்தமாக, நிரந்தரமாக பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி முதற்கட்டமாக தற்போது 14 கிராமங்களில் உள்ள மக்கள் படிப்படியாக தங்கள் வீடுகளைக் காலி செய்துவருகின்றனர்.
இவர்கள் அனைவரும் பூஞ்ச் பகுதியில் உள்ள பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவார்கள்.
உணவு, உடை மற்றும் இருப்பிட வசதிகளுக்காக இவர்களுக்கு முதற்கட்டமாக ரூ.50,000 அளிக்கப்பட்டுள்ளது.