கள்ள ஓட்டு போட்டால் ஓராண்டு ஜெயில்: தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
சென்னை:
வரும் 31ம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலின் போது கள்ள ஓட்டு போடுபவர்களுக்கு ஓராண்டு ஜெயில்தண்டனை உண்டு என்று தமிழகத் தலைமைத் தேர்தல் கமிஷனர் மிருத்யுஞ்சய் சாரங்கி கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் அமைதியாகவும்சுதந்திரமாகவும் நியாயமாகவும் இடைத் தேர்தல் நடப்பதற்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும்செய்யப்பட்டுள்ளன.
சைதாப்பேட்டையில் மட்டும் 10 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர் தேர்தல் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.தமிழகப் போலீசார் அவர்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
ஆனால் மற்ற இரண்டு தொகுதிகளிலும் முழுக்க முழுக்க தமிழகப் போலீசாரே பாதுகாப்புப் பணிகளைமேற்கொள்வார்கள்.
வாக்குச் சாவடிகளில் அசம்பாவிதம் எதுவும் நிகழ்ந்தால் அதைப் படமெடுப்பதற்காக வீடியோ குழுவினரும்தேர்தல் பார்வையாளர்களுடன் செல்வார்கள்.
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது தலைமைத் தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ள 19ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காட்டினால் தான் ஓட்டு போட முடியும்.
ஆள் மாறாட்டம் செய்து கள்ள ஓட்டு போடுபவர்களைத் தடுக்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கள்ள ஓட்டு போடுபவர்களை உடனடியாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்க தேர்தல் அதிகாரிகளுக்குஉத்தரவிட்டுள்ளோம்.
இவ்வாறு கள்ள ஓட்டு போடுபவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு இந்திய தண்டனைச்சட்டம் 171-எப் பிரிவின் படி அதிக பட்சமாக ஓராண்டு ஜெயில் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோஅளிக்கப்படும் என்றார் சாரங்கி.












Click it and Unblock the Notifications