காஷ்மீரில் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு
ஸ்ரீநகர்:
ஸ்ரீநகரில் உள்ள ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் நுழைந்த தீவிரவாதிகள் அதன் துணை ஆசிரியரைதுப்பாக்கியால் சுட்டனர்.
இன்று பிற்பகல் "காஷ்மீர் இமேஜஸ்" என்ற உள்ளூர் ஆங்கிலப் பத்திரிக்கையின் அலுவலகத்திற்கு 3 தீவிரவாதிகள்வந்தனர்.
ஜாபர் இக்பால் என்ற துணை ஆசிரியரைச் சந்தித்த அவர்கள் மூவரும் இன்று அப்பத்திரிக்கையில் வெளியானசெய்தியைப் பற்றி அவரிடம் ஏதோ விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தனர்.
பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கைத்துப்பாக்கிகளைக் கொண்டு திடீரென்று இக்பாலைச்சராமாரியாகச் சுட ஆரம்பித்தனர்.
"சைலன்சர்" பொருத்திய துப்பாக்கியால் அவர்கள் சுட்டதால் அங்கு என்ன நடந்தது என்றே அந்த பத்திரிக்கைஅலுவலகத்தில் உள்ளவர்களுக்கு முதலில் புரியவில்லை. ஆனால் அதற்குள் அந்த மூன்று பேரும் தப்பிஓடிவிட்டனர்.
இச்சம்பவத்தில் இக்பாலின் தலையில் பல குண்டுகள் பாய்ந்தன. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் நடத்தியவர்கள் தீவிரவாதிகளாஎன்பது குறித்தும் இன்னும் தெரியவில்லை.
இச் சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.