ராஜிவ் கொலையாளியை பரோலில் விடுவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
சென்னை:
இறந்து கொண்டிருக்கும் தனது தந்தையைப் பார்க்க முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகிஆயுள் தண்டனை பெற்று சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனை அனுமதிக்க வேண்டும் என்று கோரி அவரது தாயார்சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் ரவிச்சந்திரன் அடைக்கப்பட்டுள்ளார்.அவருடைய தந்தை இப்போது புற்று நோய் முற்றி உயிருக்குப் போராடி வருகிறார்.
இதையடுத்து ரவிச்சந்திரனைப் பரோலில் விடுமாறு அவருடைய தாயார் மனு செய்தார். ஆனால் சிறைக்கண்காணிப்பாளர் அதை நிராகரித்து விட்டார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ரவிச்சந்திரனின் தாயார் மனுசெய்துள்ளார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:
சிறை விதி 13ன் கீழ் மனிதாபிமான அடிப்படையில் எங்கள் மகன் ரவிச்சந்திரனை பரோலில் விடுவிக்க வழிஉள்ளது. ஆனால் அதை சிறைக் கண்காணிப்பாளர் மீறி விட்டார்.
என் கணவர் புற்று நோய் முற்றிய நிலையில் உயிருக்குப் போராடி வருகிறார். அவர் பிழைக்க மாட்டார் என்றுடாக்டர்கள் கூறி விட்டனர். எங்கள் மகன் ரவிச்சந்திரனை பார்க்க இப்போது என் கணவர் ஆசைப்படுகிறார்.
எனவே எங்கள் மகன் ரவிச்சந்திரனை ஒரு மாத காலத்திற்கு பரோலில் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்என்று அம்மனுவில் கோரியிருந்தார் ரவிச்சந்திரனின் தாயார்.
மனுவை விசாரணைக்கு ஏற்ற விடுமுறை கால நீதிபதி கோவிந்தராஜன் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications