For Quick Alerts
For Daily Alerts
Just In
எல்லைப் பதற்றத்தைக் குறைக்க மதுரையில் மஹா யாகம்
மதுரை:
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்மஹாயாகம் நடைபெறவுள்ளது.
இன்று தொடங்கும் இந்த யாகம் பத்து நாட்களுக்குத் தொடர்ந்து நடக்கும். மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம்சார்பில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதிலுமிருந்து 150 சிவாச்சாரியார்கள் இந்த யாகத்தில் கலந்து கொள்கிறார்கள். யாகத்தின்போது1,000 பேருக்கு இலவச அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மீனாட்சி அம்மன் கோவிலின் செயல் அதிகாரியான பாஸ்கரன் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
Comments
Story first published: Wednesday, May 29, 2002, 5:30 [IST]