ரயில்கள், ரயில்வே அலுவலகங்களை தாக்க தீவிரவாதிகள் திட்டம்
சென்னை:
சென்னையில் உள்ள தென்னக ரயில்வேயின் தலைமை அலுவலகம்,பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலைஉள்ளிட்ட சில ரயில்வேத்துறைக்குச் சொந்தமான இடங்களில் பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர்-ஏ-தொய்பாதீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த இடங்களில் பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகம் தவிர பிற மாநிலங்களில் உள்ள ரயில்வேயின் முக்கிய இடங்களையும் தாக்க தீவிரவாதிகள்திட்டமிட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய உள்துறைஅமைச்சகம் எச்சரிக்கை அனுப்பியுள்ளது.
மத்திய உளவுத்துறை அளித்த தகவலின்படி விரைவில் இந்திய ரயில்வே மீது பயங்கர தாக்குதல் நடத்தப்படும்என்று தெரியவந்துள்ளது.
முக்கியமாக டெல்லியிலிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்குச் செல்லும் நீண்ட தூர ரயில்களான ராஜதானி எக்ஸ்பிரஸ்போன்ற ரயில்களைத் தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே இந்தியாவில் ஓடும் அனைத்துரயில்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை, சென்னை நகரில் அமைந்துள்ளதென்னக ரயில்வேயின் தலைமை அலுவலகம் மற்றும் பேசின்பிரிட்ஜ் ரயில் தொழிற்சாலை ஆகிய இடங்களில்பெரும் தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஏற்கனவே சென்னைத் துறைமுகத்திற்குத் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அபாயம் ஏற்பட்டுள்ளதாகவந்துள்ள தகவலையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் கப்பல்களிலும் சென்னையை விட்டுக் கிளம்பும் கப்பல்களிலும்கூட பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவற்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்களும் "ஹோவர்கிராப்ட்"படகுகளும் தீவிரப் பாதுகாப்புப் பணியிலும் ரோந்துப் பணியிலும் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் ரயில்வேக்குச் சொந்தமான இடங்களைத் தாக்குவதற்குத் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவந்துள்ள செய்தியால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் சந்தேகத்திற்கிடமான ஆட்ள் நடமாட்டம் இருந்தாலோ அல்லது யாருக்கும் சொந்தமில்லாதபெட்டிகள், சந்தேகத்திற்கிடமான பொருள்கள் கிடந்தாலோ உடனே அருகில் உள்ள ரயில்வே ஊழியர் அல்லதுபோலீசாரிடம் தகவல் தெரிவிக்குமாறு அனைத்துப் பயணிகளுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications