காஷ்மீரில் போலீஸ் நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஜம்மூ:

தோடாவில் உள்ள போலீஸ் நிலையத்தை நேற்றிரவு தீவிரவாதிகள் திடீரென்று தாக்கியதைத் தொடர்ந்து ஏற்பட்டகடும் துப்பாக்கிச் சண்டையில் 3 போலீசாரும 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மூன்றடுக்குக் கட்டடத்தில் அமைந்துள்ள இந்த போலீஸ் நிலையத்திற்குள் போலீஸ் சீருடை அணிந்த தீவிரவாதிகள்நேற்று இரவு திடீரென்று புகுந்து தாக்குதல் நடத்தினர்.

அந்தத் தீவிரவாதிகள் சராமாரியாகத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். போலீசாரும் உடனடியாகச் சுதாரித்துக்கொண்டு பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் மூன்று போலீசார் குண்டு பாய்ந்துஉயிரிழந்தனர். தீவிரவாதிகள் தரப்பிலும் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே தகவலறிந்து இந்திய ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைபிள் படையினரும் சிறப்பு அதிரடிப் படையினரும்தோடா போலீஸ் நிலையத்திற்கு விரைந்து அந்தக் கட்டடத்தைச் சுற்றி வளைத்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தஆரம்பித்தனர்.

துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டே முதல் இரண்டு மாடிளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தராணுவத்தினர், மூன்றாவது மாடியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளையும் தாக்கி அங்குள்ள போலீசாரை மீட்கும்முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+