நான் புலிகளின் ஆதரவாளன் தான்: வைகோ பகிரங்க பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நான் என்றுமே விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் தான் என்றும் அவர்களுக்கு என்னுடைய ஆதரவு எப்போதும்உண்டு என்றும் மதிமுக பொதுச் செயலாளரான வைகோ கூறினார்.

சைதாப்பேட்டையில் தனது இறுதிக் கட்டப் பிரச்சாரத்தின் போது அவர் கூறியதாவது:

திமுகவும் அதிமுகவும் செய்யத் தவறிய நல்ல செயல்களை மதிமுக செய்து வருகிறது. புலிகளுக்கு எதிரானசட்டத்தை அதிமுக நிறைவேற்றிய போது திமுக அதை எதிர்க்கத் துணிவில்லாமல் நடுநிலை வகித்தது.

ஆனால் நான் எப்பொழுதுமே புலிகளின் ஆதரவாளன் தான். அவர்களை ஆதரிப்பதில் தவறேதும் இல்லை.இலங்கை மண்ணில் நம் சகோதரர்கள் தினம் தினம் செத்து மடிந்து கொண்டு இருக்கிறார்கள். காளி கோவிலும்சிவன் கோவிலும் இடிக்கப்பட்டு வருகின்றன.

எங்கள் மக்கள் இவ்வாறு அங்கு செத்து மடிந்து கொண்டிருக்கும் போது அவர்களுக்காக இங்கிருந்து நாம் குரல்கொடுப்பதில் தவறொன்றும் இல்லை.

இந்திய எல்லையில் பாகிஸ்தானிற்கும் இந்தியாவிற்கும் போர் மூளும் அபாயம் உள்ளது. பாகிஸ்தான் அணுகுண்டுசோதனை வேறு நிகழ்த்தியுள்ளது.

நான் சொல்லிக் கொள்வதெல்லாம், இனியும் பொறுத்துக் கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை.இந்தியாவைக் காக்க பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதில் தவறேதும் இல்லை. இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல்நடத்த வேணடும்.

சேது சமுத்திரம் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கவும், இந்தியப்பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாயிடம்கோரிக்கை விடுத்துள்ளோம்.

மேலும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை தனியார்மயமாக்கக்கூடாது என்றும் வேணடுகோள் விடுத்துள்ளோம்.இரண்டிற்கும் வாஜ்பாய் ஒப்புதல் அளித்துள்ளார் என்று வைகோ பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+