2 விபத்துக்களில் 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி
சென்னை:
தமிழகத்தில் இன்று நடந்த 2 வேறு வேறு சாலை விபத்துக்களில் 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலியாகினர்.
திருநல்லாற்றிலிருந்து சென்று கொண்டிருந்த ஒரு வேனும் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணத்திற்குச் சென்றுகொண்டிருந்த அரசு பஸ்சும் நாகப்பட்டினம் மாவட்டம் மல்லியம் கிராமத்திற்கு அருகே நேருக்கு நேர் பயங்கரமாகமோதிக் கொண்டன.
இவ்விபத்தில் வேனில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்த ஏழு பேர் தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள்பஸ்சில் அடிபட்டு உயிரிழந்தனர்.
பஸ் மோதிய வேகத்தில் தூக்கியெறியப்பட்ட அந்தச் சிறுவர்களின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள்உடனடியாக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி இரண்டு சிறுவர்களுமே பரிதாபமாக உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications