விமான விபத்தில் குரோனியே பலி
ஜொகன்னஸ்பர்க் (தென் ஆப்பிரிக்கா):
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹன்ஸி குரோனியே இன்று காலை ஒரு விமானவிபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
ஒரு சரக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த விமானம் விபத்தில் சிக்கியதாக குரோனியேவின்உறவினர் கூறினார்.
ஜார்ஜ் என்ற நகரில் விமானத்தைத் தரையிறக்க முயற்சித்த போது மோசமான வானிலை காரணமாக எதிரே எதுவும்சரியாக தெரியாத காரணத்தால் விமானம் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது.
விமானத்தில் அவருடன் வேறு இரண்டு பேர் மட்டுமே இருந்ததாகவும் மூவருமே பலியாகி விட்டதாகவும்கூறப்பகிறது.
ஆனால் மூவருமே பலியாகி விட்டார்களா என்பது குறித்து இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. மோசமானவானிலை காரணமாக அப்பகுதியில் மீட்பு ஹெலிகாப்டரைக் கூட இறக்க முடியவில்லை என்று தெரிகிறது.
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக குரோனியே வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடுவதற்கு சமீபத்தில் தான் தடைவிதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஸ்ரீநாத் ஓய்வு:
இதற்கிடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக இன்று பெங்களூரில் இந்திய வீரர்ஜவகல் ஸ்ரீநாத் அறிவித்தார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்காக முழு நேரப் பயிற்சியில்ஈடுபடப் போவதாகவும் ஸ்ரீநாத் கூறினார்.