கவிஞர் மேத்தாவின் மகளிடம் வரதட்சணை கொடுமை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரபல கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான மு.மேத்தாவின் மகளிடம் ரூ. 5 லட்சம் வரதட்சணை கேட்டுக்கொடுமைப்படுத்தியதாக அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மேத்தா. பிரபல கவிஞர். திரைப்படங்களுக்கு பாடல்களும் எழுதியுள்ளார். தற்போது சென்னைமாகாணக் கல்லூரியில் போரிசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சமீம் பாத்திமாவுக்கும், பெரம்பலூரைச் சேர்ந்தஇப்ராகிம் சுல்தான் என்பவருக்கும் இடையே 5 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.

இந் நிலையில் ஜான்சி என்ற நர்சுக்கும், இப்ராகிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜான்சியை, இப்ராகிம்திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த பாத்திமா அதை கடுமையாக எதிர்த்துள்ளார்.

அவரது குடும்பத்தினரும் இதுதொடர்பாக சுல்தானின் குடும்பத்தாருடன் பேசியுள்ளனர். இருப்பினும் சுல்தான், ஜான்சியுடனானதொடர்பை விடவில்லை. வேறு வழியின்றி அதைப் பொருத்துக் கொண்டு கணவருடன் வாழ்ந்து வந்தார் பாத்திமா.

இந் நிலையில் ரூ. 5 லட்சம் வரதட்சணை கேட்டு பாத்திமாவை, சுல்தானும் அவரது குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தியதாகத்தெரிகிறது. இதையடுத்து பொறுமையிழந்த பாத்திமா பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரையேற்ற போலீஸார் இப்ராகிம் சுல்தான், அவரது தந்தை ஷாகுல் ஹமீத், அம்மா பாத்திமுத்து, ஜான்சி, அவரது பெற்றோர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+