எஸ்.எஸ்.எல்.சியில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை
தருமபுரி:
பத்தாவது வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்த 2 மாணவிகள் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.
தமிழகத்தில் சமீபத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் வெளியிடப்பட்டன. தருமபுரி மாவட்டம் தளி பகுதியைச் சேர்ந்தவள்ளி என்ற பெண் இத்தேர்வில் தோல்வியடைந்து விட்டார்.
இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வள்ளி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
அதே போல் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்த சுபாவும் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் தோல்வியடைந்தார்.
பெயில் ஆகி விட்டோமே என்ற மிகவும் வருந்திய சுபா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் உடம்பில்மண்ணெண்ணையை ஊற்றித் தீவைத்துக் கொண்டு சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
தேர்வில் தோல்வியடைபவர்கள் இதுபோன்ற தவறான முடிவுகளுக்குச் செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகசென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள நாட்டு நலப்பணித் திட்ட மாணவ-மாணவியர் சிறப்பு ஆலோசனைமுகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் பாண்டிச்சேரியிலும் "மைத்ரேயி தற்கொலைத் தடுப்பு நிறுவனம்" என்ற அமைப்பு தேர்வுகளில்தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.