திமுக-பாமக எம்.பிக்கள் டெல்லியில் உண்ணாவிரதம்
டெல்லி:
சைதாப்பேட்டை இடைத் தேர்தலில் போலீஸாரின் துணையோடு அதிமுகவினர் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி அதைக்கண்டித்து டெல்லியில் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் பா.ம.க. எம்.பிக்கள் திங்கள்கிழமை டெல்லியில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர்.
இதன் பின்னர் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் லிங்டோவைச் சந்தித்து சைதாப்பேட்டையில் மறு தேர்தல் நடத்தக் கோரி மனுகொடுத்தனர்.
சைதாப்பேட்டை இடைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது அதிமுகவினர் அராஜக வன்முறையில் ஈடுபட்டதாகவும், வெற்று சாதிச்சான்றிதழை கள்ள ஓட்டுப் போடும் அதிமுகவினருக்கு ஆயிரக்கணக்கில் வினியோகம் செய்து ஜனநாயகப் படுகொலை செய்துள்ளதாகவும்திமுக குற்றம்சாட்டி உள்ளது. சைதை தொகுதி முழுவதிலும் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
இந் நிலையில் மத்திய தேர்தல் கமிஷனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் டெல்லியில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்டத்தில் கலந்து கொள்ளும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை இரவுவிமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
திமுகவின் போராட்டத்தில் தானும் கலந்து கொள்ளப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இருப்பினும் கட்சியின்எம்.பிக்கள் மட்டுமே கலந்து கொள்வர் என்று பாமக தெரிவித்துள்ளது. அவர்களும் ஞாயிற்றுக்கிழமை இரவே டெல்லி சென்றுவிட்டனர்.
இன்று காலை ஜந்தர்மந்தர் சாலையில் அவர்கள் உண்ணாவிரதப் போராடத்தைத் தொடங்கினர். திமுகவினருடன் பா.ம.கவினரும் இந்தப்போராட்டதில் கலந்து கொண்டனர்.
இன்று மாலை உண்ணாவிரதப் போராட்டம் முடிந்த பின்னர் திமுக எம்.பிக்கள் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து சைதாப்பேட்டைதேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் கொடுத்தனர். அந்த மனுவில், மீண்டும் சைதாப்பேட்டையில் தேர்தல் நடத்த வேண்டும். அனைத்துவாக்குச் சாவடிகளிலும வீடியோ கேமராக்களை வைத்து தேர்தலை கண்காணிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை சந்திக்க திட்டம்:
இதற்கிடையே ஜனாதிபதி கே.ஆர். நாராயணனைச் சந்தித்து புகார் மனு தர பாட்டாளி மக்கள் கட்சிதிட்டமிட்டுள்ளது.